தேவையான பொருட்கள்:
முடக்கத்தான் கீரை-1 கப்;மிளகாய் வற்றல்-8;
நல்லெண்ணெய்-தேவையான அளவு;
பெருங்காயம்-சிறிதளவு;
உளுத்தம் பருப்பு-சிறிதளவு;
கடுகு-சிறிதளவு;
புளி-எலுமிச்சம் பழ அளவு;
உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மிள்காயை நன்கு வறுத்துக்கொள்ளவும். அத்துடன் புளியையும், சுத்தம் செய்த கீரையையும்சேர்த்து, நன்கு வதக்கிஎடுத்து அரைத்தால், கமகமக்கும் துவையல் தயார். மிக்ஸியில் அரைப்பதைவிட அம்மிக் கல்லில் அரைத்தால், கூடுதல் சுவை இருக்கும்.குறைந்தது 3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.பலன்:
வைட்டமின்களும் தாது உப்புக்களும் நிறைந்தது, முடக்கத்தான் கீரை. இந்த துவையலை, உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்வதன் மூலம், மூல நோய், மலச் சிக்கல், பக்கவாதம், மூட்டு நோய்கள் போன்றவை குணமடையும். மூட்டுகளில் தங்கியிருக்கும் புரதம், யூரிக் அமிலம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் கொழுப்புத் திரட்சி, படிமங்களைக் கரைத்து வலிகளைப் போக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு, இக்கீரை மிகவும் நல்லது.

கருத்துகள்
கருத்துரையிடுக