முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெஜிடபுள் சீஸ் தோசை!

தேவையான பொருள்கள்:- தோசை மாவு - ஒரு கப் காலிஃப்ளவர் - பாதி அளவான பூ காரட் - 2 தக்காளி - ஒன்று பெரிய வெங்காயம் - ஒன்று உருளைக்கிழங்கு - ஒன்று பச்சைப் பட்டாணி - 2 மேசைக்கரண்டி நறுக்கிய சீஸ் துண்டுகள் - 2 மேசைக்கரண்டி எண்ணெய் - பொரிப்பதற்கு செய்முறை:- தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். காலிஃப்ளவரை சிறிதாக உதிர்த்துக் கொள்ளவும். காரட்டை துருவி வைக்கவும். உருளைக்கிழங்கை ஃபிங்கர் சிப்ஸ் வடிவில் நறுக்கவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். வெங்காயத்தை வதக்கி எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, பின்னர் எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும். காலிஃப்ளவர், காரட், பட்டாணி ஆகியவற்றை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். (அனைத்து காய்களையும் கிழங்கு உட்பட - இட்லி தட்டில் ஒரே நேரத்தில் வேகவைத்து எடுக்கலாம்). அடுப்பில் தோசைக் கல்லை காயவைத்து, தோசை மாவை எடுத்து சற்று கனமான தோசையாக ஊற்றவும். (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). வேக வைத்த காய்கறிகளையும், நறுக்கிய தக்காளியையும் தோசை மேல் தூவி அலங்கரிக்கவும். பிறகு சீஸ் துண்டுகளையும் மேலே தூவவும...

டொமேட்டோ மட்டன் கிரேவி!

தேவையானவை:- மட்டன் - அரை கிலோ வெங்காயம் - 2 தக்காளி - 4 இஞ்சி - பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் விழுது - 4 மேசைக்கரண்டி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 2 மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி சோம்புத்தூள் - ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் - 2 தேக்கரண்டி தனியாத்தூள் - 2 தேக்கரண்டி பாதாம் தூள் - 2 மேசைக்கரண்டி கொத்தமல்லித் தழை, புதினா, எண்ணெய், உப்பு - தேவைக்கு செய்முறை:- மட்டனைச் சுத்தம் செய்து துண்டுகளாக்கி வைக்கவும். மிக்ஸியில் தக்காளியுடன் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெயை ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலை தாளித்து, வாசனை வந்தவுடன் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் மொறுமொறுவென வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய், பாதாம் தூள் தவிர மற்ற தூள் வகைகளைச் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி விழுது, மட்டன் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். தண்ணீர் சேர்க்காமல் நான்கு விசில...

கீமா ஸ்டஃப்டு சப்பாத்தி

தேவையானவை:- மட்டன் கீமா - 100 கிராம் கோதுமை மாவு - 1 கப் இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன் வெங்காயம் - 1 பொரித்த வெங்காயம் - 2 உப்பு - தேவைக்கு மிளகாய்த்தூள்- அரை ஸ்பூன் தனியாத்தூள் - 1 ஸ்பூன் மிளகுத்தூள் – கால் ஸ்பூன் கடலை மாவு - தேவைக்கு ஏலக்காய் ஜாதிபத்திரி தூள் - சிறிதளவு எண்ணெய் - (கைமா தாளிக்க, சப்பாத்தி சுட தேவைக்கு) செய்முறை:- கோதுமை மாவில் சிறிதளவு உப்பு மற்றும் வெதுவெதுப்பான நீர் சேர்த்து பிசைந்து காற்று புகாத டப்பாவில் ஒரு மணி நேரம் வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு பொடியாய் நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் கீமாவைச் சேர்க்கவும். சுருண்டு வந்ததும் உப்பு, தனியாத்தூள், மிளகாய்தூள், மிளகுத்தூள் மற்றும் ஏலக்காய் ஜாதிபத்திரி தூளைச் சேர்த்து மசாலா வாசம் நீங்க கிளறவும். நீர் தெளித்து மூடிவிட்டு வேகவிடவும். கீமா வெந்ததும் கொத்தமல்லி, பொரித்த வெங்காயம் சேர்த்து கிளறவும். கெட்டியாக ஆகும் பதம் வரும் அளவுக்கு சிறிது சிறிதாக கடலை மாவு சேர்த்து உருண்டை பிடிக்கும் பதம் வந்த பிறகு இறக்கவும் சப்பாத்தி மாவைத்...

இறால் பீன்ஸ் குழம்பு!

தேவையானவை:- இறால் - கால் கிலோ பீன்ஸ் - கால் கிலோ வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 100 கிராம் பச்சை மிளகாய் - 2 இஞ்சி - பூண்டு விழுது - 3 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி மல்லித்தூள் - 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி வடகம் - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு இணுக்கு புளித் தண்ணீர் - 2 தம்ளர் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை:- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வடகம், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி பீன்ஸ் சேர்த்து வதக்கவும். வதக்கியவற்றுடன் எல்லா தூள் வகைகளுடன் உப்பும் சேர்த்து வாசம் போக கிளறவும். பீன்ஸ் பாதியளவு வெந்ததும் இறால் சேர்த்து கிளறவும். இறால் பீன்ஸ் கலவையுடன் புளித் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். இறால் வெந்தவுடன் கறிவேப்பிலை தூவி இறக்கவும். சுவையான இறால் பீன்ஸ் குழம்பு தயார்.

மட்டன் முகலாய் மசாலா!

தேவையானவை:- மட்டன் - அரை கிலோ எண்ணெய் - 4 மேசைக்கரண்டி நெய் - 4 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 3 தேக்கரண்டி வெங்காயம் - 400 கிராம் பச்சை மிளகாய் - 3 காஷ்மீரி சில்லி - 5 பட்டை - ஒரு துண்டு ஏலக்காய் - 3 கிராம்பு - 3 மல்லி - 3 தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி மிளகு - அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி தயிர் - ஒரு கப் புதினா, கொத்தமல்லித் தழை - சிறிது உப்பு - தேவையான அளவு செய்முறை:- தேவையான பொருள்களைத் தயாராக எடுத்து வைக்கவும். மட்டனை நடுத்தர அளவு துண்டுகளாக்கிச் சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும். வெங்காயம், கொத்தமல்லித்தழை, புதினா மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். மட்டனை நான்கு தேக்கரண்டி நெய்விட்டு தண்ணீர் வற்றும் வரை வதக்கி எடுத்து வைக்கவும். மிக்ஸியில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, காஷ்மீரி சில்லி, மல்லி, சீரகம், மிளகு மற்றும் மஞ்சள்தூள் ஆகியவற்றைப் போட்டு பொடித்துக் கொள்ளவும். அத்துடன் வெங்காயம் சேர்த்து அரைத்தெடுக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு இஞ்சி, பூண்டு விழுது மற்றும் அரைத்த மசாலா சேர்த்து சுருள...

எந்தவகை ரத்தம் உள்ளவர்கள் என்ன வகையான உணவுகளை சாப்பிடனும்?

இரத்தத்தின் தன்மைக்கு ஏற்றபடி அமில, காரத்தன்மையுள்ள உணவு வகைகளை உண்டால் அது நமது செயல் திறனை அதிகரிக்கும். ஆரோக்கியமான உடலை தரும். இந்த பதிவில் எந்த இரத்த வகை கொண்டவர்களுக்கு என்ன மாதிரியான உணவுகள் பொருந்தும் என்று பார்க்கலாம். ’ஏ’ பிரிவு இரத்த வகை:- இவர்களுக்கு சைவ உணவு மட்டுமே பொருத்தமானது. புத்தம் புதிய காய்கறிகள்,கீரை வகைகளை இவர்கள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பயறுவகைகளில் அதிகமான புரதச்சத்து உள்ளது. அவை இவர்களுக்கு இதய நோய்கள், புற்றுநோய்,நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவு தடுக்கும். ‘ஏ’ இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு மேற்கண்ட நோய்கள் ஏற்படும் சூழ்நிலை அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரத்த வகை கொண்டவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நலம். இவை இவர்களுக்கு எளிதில் சீரணம் ஆவதில்லை. முட்டைக்கோஸ், தக்காளி, உருளைக்கிழங்கு,மிளகு போன்றவற்றில் இருக்கும் ‘லெக்டின்’ என்ற பொருள் இவர்களின் வயிற்றுக்கு தொந்தரவை தரும். ‘பி’ இரத்த வகை: - மிதமான மென்மையான உணவுகளே இந்த வகை இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு ஏற்றவை...

சத்தான கம்பு வடை

தேவையானவை : கம்பு – 1 கப் சின்ன வெங்காயம் – 1/4 குவளை (நறுக்கியது) கருவேப்பிலை – 1 கைப்பிடி (நறுக்கியது) கொத்தமல்லி – 1 கைப்பிடி (நறுக்கியது) இஞ்சி – சிறுதுண்டு சோம்பு – 1/2 தேக்கரண்டி பட்டை – சிறிய துண்டு மிளகாய் – 3 உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொறிப்பதற்கு செய்முறை • கம்பை 3 மணிநேரம் ஊறவிட்டு இஞ்சி, சோம்பு, பட்டை, மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக குறைந்த நீரில் அரைத்துக் கொள்ளவும். • அரைத்த மாவுடன் வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து வடைகளாக தட்டி எண்ணெயில் பொறித்தெடுக்கவும். • விரும்பினால் கற்பூரவல்லி இலையையும் சேர்த்துக்கொள்ளவும்.

அனைத்து சத்துகளூம் ஒரே உணவில் பெற ”பிசிபேளா பாத்”

தேவையானவை: பச்சரிசி/பாஸ்மதி அரிசி ...1 ஆழாக்கு துவரம் பருப்பு.................... 1 /2 ஆழாக்கு மிளகாய்.............................5 மல்லி.................................2 தேக்கரண்டி மிளகு+சீரகம்...................தலா 1 /2   தேக்கரண்டி சோம்பு...............................1 /4   தேக்கரண்டி பட்டை, சின்ன துண்டு, கிராம்பு,...............................4 ஏலம்..................................2 காயம்..................................கொஞ்சம் உ.பருப்பு, க.பருப்பு..... தலா 1 தேக்கரண்டி புளி.....................................எலுமிச்சை அளவு வெல்லம்.........................கொட்டை பாக்கு அளவு எண்ணெய், நெய் ...................தலா.. 3   தேக்கரண்டி முந்திரி,கிசுமிசு..............தலா ..10 புதினா, கறிவேப்பிலை, மல்லித்தழை....கைப்பிடி சாம்பார் வெங்காயம்.......................100 கிராம் காய்கறிகள்................................. எது வேண்டுமாயினும் தாளிக்க..கடுகு, உ.பருப்பு............தலா  1 /4தேக்கரண்டி சிவப்பு மிளகாய்.. தாளிக்க........3 உப்பு..................

நுங்கு லெஸ்ஸி

தேவையானவை: பனை நுங்கு.........................8 சீனி..................................... 8 தேக்கரண்டி பால்......................................100 மில்லி செய்முறை : நுங்கு வாங்கும்போது இளநுங்காக‌ப் பார்த்து வாங்கவும். நுங்கில் தோலை பக்குவமாக உரிக்கவும். பின் சிறு துண்டுகளாக வெட்டவும். ஒரு பாத்திரத்தை எடுத்து அதில், நுங்கைப் போட்டு, சீனி + பால் ஊற்றி, நன்கு கலக்கிய பிறகு,  குளிர் பதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும். பிறகு எடுத்து சாப்பிடவும். வெயிலுக்கு இதமாக இருக்கும். செய்வது மிக எளிது.

மாங்காய் சாதம்

தேவையானவை: அரிசி................1 ஆழாக்கு பெரிய கல்லாமணி/கிளி மூக்கு மாங்காய்..1 இஞ்சி ...................1 /2 இன்ச் நீளம் பச்சை மிளகாய்...........4 தாளிக்க.. கடுகு, சீரகம்,உ.பருப்பு ..தலா 1 /4 தேக்கரண்டி பெருங்காயம்...........கொஞ்சம் எண்ணெய்..............3 தேக்கரண்டி . கறிவேப்பிலை+மல்லித்தழை...கைப்பிடி உப்பு............................தேவையான அளவு சீனி.............................1 தேக்கரண்டி செய்முறை : அரிசியை 2 மடங்கு நீர்விட்டு குக்கரில் வேகவிடவும். அதனை ஓர் அகன்ற பாத்திரத்தில் கொட்டி, ஒரு கரண்டி நெய்/எண்ணெய் விட்டுக்கிளறி ஆற வைக்கவும். மாங்காயை தோல் நீக்கி காரட் சீவும் கட்டையில் சீவி வைக்கவும். இஞ்சியை நன்றாக அரைக்கவும்.; ப.மிளகாயை இரண்டாகக் கீறவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் அதில், கடுகு,உ.பருப்பு, சீரகம் போட்டு சிவந்ததும், கறிவேப்பிலை,மிளகாயப் போடவும்.தீயைக் குறைத்து வைக்கவும். உடனேயே சீவிய மாங்காய், உப்பு, சீனி,பெருங்காயம் போட்டு ஒரு கிளறு கிளறவும். அதிலேயே சாதத்தைப் போட்டு கிளறவும். பின் அடுப்பை அணைத்துவிட்டு மல்லியை நறுக்கித் தூவி இறக்கிவி...

மல்லி சாதம்

தேவையானவை: பச்சரிசி/பாஸ்மதி அரிசி............1 ஆழாக்கு மல்லி..........................................150 கிராம் (நைசாக அரைத்து வைக்கவும்) காய்ந்த மிளகாய்........................3 கடுகு, உ.பருப்பு............................1/2 தேக்கரண்டி இஞ்சி............................................சின்ன துண்டு (பொடியாக நறுக்கவும்) காரட்............................................1 ( துருவி வைக்கவும்) முந்திரி பருப்பு...........................10 எண்ணெய்............................... 1 தேக்கரண்டி நெய்........................................... 1 தேக்கரண்டி கறிவேப்பிலை .............................1 கொத்து உப்பு............................................. தேவையான அளவு. செய்முறை: அரிசியை நன்கு களைந்து, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் உப்பு போட்டு வேகவைக்கவும். ஆவி போன பின் ஒரு பாத்திரத்தில் போட்டு நெய் விட்டு உதிர்த்து விடவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, காய்ந்ததும், மிளகாயை இரண்டாக ஒடித்துப்போட்டு, கடுகு, உ.பருப்பு போட்டு சிவந்ததும், அதில் முந்திரி, கறிவேப்பிலை போட்டு ச...

கோதுமை உசிலி

உபயோகப்படுத்த வேண்டிய பொருட்கள்: கோதுமை மாவு - 1 கப் அரிசி மாவு - 3 டீஸ்பூன் முழு உளுந்து - 1 கப் கடலை பருப்பு - 3/4 கப் பச்சை மிளகாய் - 3 (அ) 4 கருவேப்பிலை - 2 இலை கடுகு - 1/2 டீஸ்பூன் பெருங்காயம் - சிறிதளவு எண்ணை, உப்பு - தேவையான அளவு செய்முறை: கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் தண்ணீர் தெளித்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக செய்து ஆவியில் வேகவைத்துக் கொள்ளவும். உளுந்து, கடலை பருப்பை ஊற வைக்கவும். இவற்றோடு பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொண்டு, பிறகு இந்த கலவையை ஆவியில் வேக வைத்து எடுத்து, ஆறின பிறகு இதை மிக்ஸியில் அரைத்து வைத்துகொள்ளவும். வாணலியில் எண்ணை வைத்து காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் அதில் பெருங்காயம், கருவேப்பிலை, அரைத்து வைத்த பருப்பு கலவை, வேக வைத்த மாவு உருண்டைகள் அனைத்தையும் போது வதக்கி எடுத்து வைத்து பரிமாறவும்.

பேபி உருளைக்கிழங்கு கறி

தேவையானவை: பேபி உருளைக்கிழங்கு.....................1/4 கிலோ  மிளகாய்ப் பொடி.................................1/2 தேக்கரண்டி சீரகம்........................................................ 1/4 தேக்கரண்டி தேங்காய்................................................. 2 தேக்கரண்டி  சின்ன வெங்காயம்..................................10  கறிவேப்பிலை .......................................ஒரு கொத்து  தே. எண்ணெய்......................................... 2 தேக்கரண்டி  கடுகு + உ.பருப்பு......................................... 1/2 தேக்கரண்டி  உப்பு ............................................................தேவையான அளவு செய்முறை: வெங்காயத்தை உரித்து நைசாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை நன்கு அரைக்கவும். பேபி உருளைக்கிழங்கை நன்கு கழுவி ஒரு ஊசியால் நான்கைந்து இடத்தில் துளை போடவும். குக்கரில் அளவான நீர் விட்டு, கொஞ்சம் உப்பு போட்டு அதில் உருளையை வேகவைக்கவும். உருளை வெந்ததும் தோல் உரிக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் கடுகு+உ.பருப...

காளான் கறிக்குழம்பு

தேவையானவை: காளான்..............................1 /2 கிலோ கறிமசால் பொடி..............20கிராம். மஞ்சள் பொடி.................  கொஞ்சம் பெல்லாரி.......................... 2 தேங்காய் துருவல் ............... கைப்பிடியளவு முந்திரி................................8 கறிவேப்பிலை.................ஒரு கொத்து உப்பு......................................தேவையான அளவு எண்ணெய்..........................3 தேக்கரண்டி. செய்முறை: காளானைத் துடைத்து, அதில் ஒட்டியுள்ள அழுக்கை எடுத்துவிட்டு, கழுவி நறுக்கவும். பெல்லாரியை நறுக்கவும். தேங்காய் + முந்திரியை நைசாக அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் வெங்காயம் போட்டு, உப்பும் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், காளானைப் போட்டு வதக்கி, அதிலேயே மஞ்சள் பொடி+ கறிமசாலா பொடி போட்டு ஒரு புரட்டி விட்டு, அதிலேயே அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு வேண்டிய அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் இறக்கி விடவும். இதனை இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம், ஆப்பம் எதற்கு வேண்டுமாலும் தொட்டு சாப்பிடலாம்.

பீர்க்கங்காய் வதக்கல்

தேவையானவை: பீர்க்கங்காய்...............1/2 கிலோ  சின்ன வெங்காயம்....10 மிளகாய்ப் பொடி .......1/2 தேக்கரண்டி  மஞ்சள் பொடி ............1 சிட்டிகை  கறிவேப்பிலை..........1 கொத்து எண்ணெய் ..................2 தேக்கரண்டி  உப்பு.............................. தேவையான அளவு  தேங்காய்..+ சீரகம ..தேவையானால்  1 தேக்கரண்டி  கடுகு+ சீரகம்....................1/4 தேக்கரண்டி செய்முறை: பீர்க்கங்காயை தோல் சீவி, கொஞ்சம் பெரிதாக நறுக்கவும். வெங்காயம் நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் கொஞ்சம் தேங்காய் + சீரகம் வைத்து பரபரவென்று அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு சீரகம் போட்டு, பொரிந்ததும், வெங்காயம்+உப்பு போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய பீர்க்கங்காய் போட்டு வதக்கவும். அடுப்பைக் குறைத்து சீராக எரிய விடவும். பீர்க்கங்காய் வதங்கியதும், அதிலேயே மஞ்சள் பொடி + மிளகாய்ப் பொடி போட்டு வதக்கவும். காய் வதங்கியதும், தேங்காய் போட்டு கிளறி 2 நிமிடம் கழித்து இறக்கவும். இந்த பீர்க்கங்காய் வதக்கல் படு சூப்பராய் இ...

மல்லி, புதினா, வெஜிடபிள் சாதம்

தேவையானவை: பாஸ்மதி அரிசி/பச்சரிசி..1/2 கிலோ பெல்லாரி..............................2 காரட்.....................................2 முட்டைகோஸ்..................100 கிராம் பீன்ஸ் .................................100 கிராம் மல்லி தழை......................100 கிராம் புதினா................................50 கிராம். பூண்டு, ..............................5 இஞ்சி ...............................சின்ன துண்டு பட்டை, ............................மிகக் கொஞ்சமாக கிராம்பு............................ 2 மிளகுப் பொடி..................3 தேக்கரண்டி எண்ணெய்........................100 மில்லி உப்பு ..................................போதுமான அளவு. செய்முறை : அரிசியை கல் நீக்கி கழுவி, கொஞ்சம் உப்பு போட்டு, அரிசிக்கு இரு மடங்கு நீர் உற்றி, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். உடனே, திறந்து சாதம் ஒட்டாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். காரட், முட்டைகோஸ், பீன்ஸை கொஞ்சம் பெரிதாகவே நறுக்கவும். வெங்காயத்தையும் நீளவாக்கில் பெரிதாக நறுக்கவும். மல்லி+புதினாவை வெறுமனே அரைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டைய...

பாரம்பரியமான கேழ்வரகு தானிய உணவு செய்யும் முறைகள்

உணவே மருந்தாக இருக்கவேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த எளிதாக ஜீரணிக்கும் பொருட்களை உணவாக உட்கொள்ளும் போது செரிமான மண்டல ம் சீராக இயங்கி பலவித நோய்களை வர விடாமலும், வந்த நோய்களின் தீவிரத்தை குறைக்கவும் உதவுகிறது. ஆகவேதான் இந்திய பாரம்பரியமான உணவு வகைகள் அனைவரின் உடலிற்கும் சுற்றுப்புற தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றவாறு அமைகிறது. உடலின் கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்புதமான சக்தி கேழ்வரகிற்கு உண்டு. உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுப்பொருட்களில் மிக முக்கிய சத்தான தானியங்களுள் கம்புக்கு அடுத்து இருப்பது கேழ்வரகு மட்டுமே.சிறு குழந்தைகள், வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற உணவாக கேழ்வரகு. பெருமளவில் புரதம், பாஸ்பரஸ், இரும்பு, தையமின் மற்றும் ரைபோபிளேவின் வைட்டமின்கள் காணப்படுகின்றன. இரத்தத்திலுள்ள கொழுப்பையும் மற்றும் கொழுப்பு அமிலங்களையும் கரைத்து கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்புத ஆற்றலை படைத்தது கேழ்வரகாகும். இதில் பெருமளவில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, பாஸ்பரஸ், தையமின் மற்றும் ரைபோபிளேவின் வைட்ட...