தேவையானவை: காலிஃப்ளவர் சிறியது - ஒன்று மைதா மாவு - ஒரு மேசைக்கரண்டி கார்ன்ஃப்ளார் - அரை மேசைக்கரண்டி தனி மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - ஒரு சிட்டிகை + ஒரு தேக்கரண்டி குடமிளகாய் - ஒன்று மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி இஞ்சி - பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி தக்காளி சாஸ் - 3 மேசைக்கரண்டி வெங்காயம் - 2 மிளகாய்த்தூள் - ஒன்றரை தேக்கரண்டி பூண்டு - 8 பல் செய்முறை: பூண்டை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், குடமிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காலிஃப்ளவரை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருள்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு தட்டில் காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சுடுநீரை ஊற்றி 5 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் எடுத்து தண்ணீரை வடிகட்டி அதனுடன் மைதா மாவு, கார்ன்ஃப்ளார், மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு பிசைந்துக் கொள்ளவும். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசறி 10 நிமிடம் ஊற வைக்கவும். வாணலியில் ஒன்றரை கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஊற வைத்த காலிஃப்ளவர் துண்டு...