முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோபி மஞ்சூரியன்

தேவையானவை: காலிஃப்ளவர் சிறியது - ஒன்று மைதா மாவு - ஒரு மேசைக்கரண்டி கார்ன்ஃப்ளார் - அரை மேசைக்கரண்டி தனி மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - ஒரு சிட்டிகை + ஒரு தேக்கரண்டி குடமிளகாய் - ஒன்று மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி இஞ்சி - பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி தக்காளி சாஸ் - 3 மேசைக்கரண்டி வெங்காயம் - 2 மிளகாய்த்தூள் - ஒன்றரை தேக்கரண்டி பூண்டு - 8 பல் செய்முறை: பூண்டை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், குடமிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காலிஃப்ளவரை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருள்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு தட்டில் காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சுடுநீரை ஊற்றி 5 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் எடுத்து தண்ணீரை வடிகட்டி அதனுடன் மைதா மாவு, கார்ன்ஃப்ளார், மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு பிசைந்துக் கொள்ளவும். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசறி 10 நிமிடம் ஊற வைக்கவும். வாணலியில் ஒன்றரை கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஊற வைத்த காலிஃப்ளவர் துண்டு...

நண்டு மிளகு சூப்

தேவையானவை: பெரிய நண்டு - 2 மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி சோள மாவு - ஒரு தேக்கரண்டி சோளம் - ஒரு சிறிய டின் முட்டை - 2 உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும். வெந்த நண்டின் சதை பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும். நண்டு கறியில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து பிறகு அதில் சோளம், சோள மாவு, உப்பு மற்றும் மிளகு சேர்த்துக் கொதிக்க விடவும். கொதித்த பிறகு முட்டையின் மஞ்சள் கருவை அடித்து ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கலக்கவும். அதன் பிறகு முட்டையின் வெள்ளைக் கருவையும் சேர்த்து சிறிது நேரம் கலக்கி அடுப்பில் இருந்து இறக்கவும். பிறகு சூடாகப் பரிமாறவும்.

சிக்கன் - மஷ்ரூம் கறி

தேவையானவை: சிக்கன் - முக்கால் கிலோ காளான் - கால் கிலோ குடமிளகாய் - இரண்டு வெங்காயம் - இரண்டு தக்காளி - நான்கு இஞ்சி - இரண்டு அங்குலத்துண்டு பூண்டு - ஆறு பற்கள் சீரகம் - ஒரு தேக்கரண்டி மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி வெண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத்தமல்லி - ஒரு பிடி செய்முறை சிக்கனைச் சிறு சிறு துண்டுகளாக்கி, சிறிது உப்பைப் போட்டு வேகவைத்து வடிகட்டிக் கொள்ளவும். காளானை நன்கு துடைத்து நான்கு, நான்காக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், குடமிளகாயை ஒரே அளவாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நன்கு கரைத்துக் கொள்ளவும். மசாலாத்தூள் வகைகளை சிறிது நீர் சேர்த்து குழைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், எண்ணெயைக் கலந்து காயவைக்கவும். முதலில் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு, சீரக...

குறுகு தானிய உப்புமா

தேவையான பொருட்கள்: குதிரைவாலி அரிசி-100 கிராம்;  சாமை அரிசி-50 கிராம்;  வரகு அரிசி-100 கிராம்;  தினை அரிசி-50 கிராம்;  காய்கறிகள்-1 கப் ( தேவைக்கேற்ப);  நல்லெண்ணெய்-தேவைக்கேற்ப;  மிளகாய் வற்றல்-6;  கடுகு-சிறிதளவு;  உளுத்தம் பருப்பு-சிறிதளவு;  கறிவேப்பிலை-சிறிதளவு;  கொத்தமல்லி-சிறிதளவு;  உப்பு-தேவையான அளவு. செய்முறை: ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அதனுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளிக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வெட்டிவைத்த காய்கறிகளையும் உப்பையும் கலந்து 2 நிமிடம் வேகவிடவும். இத்துடன் குருணையாகக்ப்படட் குதிரைவாலி, சாமை, வரகு மற்றும் தினை அரிசியைக் சேர்த்து நன்றாக வேகும்வரை கிளறினால், குறுதானிய உப்புமா தயார். பலன்கள்: குறுதானியங்களில் உள்ள கனிம சத்து, உடல் கட்டமைப்பை செதுக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து, எலும்பு, பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகிறது. செல் வளர்சிதை மாற்றத்திலும்...

குதிரைவாலி- காய்கறி உப்மா

தேவையான பொருட்கள்: குதிரைவாலி-1 கப்;  பீன்ஸ்-10 ( பொடியாக நறுக்கியது);  கேரட்- பாதியளவு- (நன்கு துருவியது); தேங்காய்( துருவியது)-1/4 கப்;   தேங்காய் எண்ணெய்-தாளிக்க;  கடுகு-1 டீ ஸ்பூன்;  உளுத்தம் பருப்பு-1 ட்ஸ்பூன்;  சிவப்பு மிளகாய்-2;  பெருங்காய பௌடர்-1/4 டீஸ்பூன்;  தண்ணீர்-2 கப்;  கறிவேப்பிலை மற்றும் உப்பு. செய்முறை: குதிரைவாலியைக் கழுவி தனியாக வைக்கவும்/. ஒரு குக்கரில் தேங்காயெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் மற்றும் பெருங்காயம் போட்டு தாளிக்கவும். நறுக்கிய பீன்ஸ், கேரட்டைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். தேங்காய்த் துருவலை சேர்க்கவும். . அத்துடன் சுத்தம் செய்யப்படட் குதிரவாலியை சேர்த்து, தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கி மூடவும். 4 விசில் விட்டு எடுக்கவும். சாதாரணமாகவும் சாப்பிடலாம். தேங்காய்ச் சட்னியுடனும் சாப்பிடலாம்.

ஓட்ஸ் வடை

தேவையான பொருட்கள்: ஓட்ஸ்- 2 டம்ளர்;  ரவை-1 டம்ளர்;  தயிர்-100 மில்லி;  பச்சை மிளகாய்-5;  துருவிய தேங்காய்-4 தேக்கரண்டி;  பெருங்காயத்தூள், கொத்தமல்லித்தழை, எண்ணெய், உப்பு. செய்முறை: ரவையைப் பக்குவமாக வறுத்துக்கொள்ளவும். தேங்காய்த்துருவலுடன் விதை நீக்கிய மிளகாயைச் சேர்த்து அரைத்து தயிரில் கொட்டவும். இத்துடன் ரவை, நறுக்கிய கொத்தமல்லித்தழை, ஓட்ஸ்சேர்த்து நன்கு கிளறவும். கலவை கெட்டியாக இல்லாவிட்டால், ஓட்ஸ் மற்றும் ரவை சேர்க்கலாம். இதை வடையாகத் தட்டி எண்ணெயில் பொந்நிறமாகப் பொறித்தெடுக்கவும். வித்தியாச சுவை கொண்ட ஓட்ஸ் வடை தயார்.

கிழங்கு கட்லெட்

தேவையான பொருட்கள்: சர்க்கரை வள்ளிக் கிழங்கு-1/2 கிலோ;  கேரட்-1/4 கிலோ; சர்க்கரை-100 கிராம்;  ரொட்டித் துண்டு-4;  பால்-1/4 டம்ளர்;  ஏலத்தூள்-1 தேக்கரண்டி;  ரொட்டித்தூள் அல்லது ரஸ்க் தூள்-சிறிதளவு; நெய், எண்ணெய். செய்முறை: ரொட்டித் துண்டுகளை பாலில் ஊற்வைகக்வும். கிழங்கு, கேரட்டைக் கழுவி, வேக வைத்து, தோலுரித்து மசித்துக்கொள்ளவும். இத்துடன் ரொட்டித் துண்டுகளப் போட்டு கட்டியின்றி பிசையவும். சர்க்கரையுடன் நீர் கலந்து காய்ச்சி,, கம்பிப் பாகு வந்தவுடன், ஏலத்தூள் , பிசைந்த கலவையைப் போட்டு, சிறிது நெய் விட்டு சுருள வதக்கி எடுக்கவும். இந்தக் கலவை வடை மாவு பதத்தில் இருகக்வேண்டும். இதை கட்லெட் வடிவில் தட்டி ரொட்டித் தூள் அல்லது ரஸ்க் தூளில் புரட்டி அடுப்பில் சூடான தவாவில் நெய்/எண்ணெய் விட்டு, சிவக்க வேகவிட்டு எடுக்கவும். சுவையான கிழங்கு, கட்லெட் தயார். இன்னும் வித்தியாசமாக விரும்பினால், தக்காளி சாஸ் தொட்டும் சாப்பிடலாம். கிழங்கு கட்லெட்

பூண்டு சூப்

தேவையான பொருட்கள்: புளித் தண்ணீர்-1 தம்ளர்; பூண்டு-10 பல்;  மிளகு, ஜீரகம் –தலா 2 தேக்கரண்டி;  மல்லித்தழை, கருவேப்பிலை. செய்முறை: புளித் தண்ணீரைக் கொதிக்க விடவும். மிளகு, ஜீரகம், பூண்டு,கருவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்து, அதில் கலக்கவும். வெண்ணெய், உப்பு சேர்த்து நன்கு கொதி வந்ததும், இறக்கி, சுத்தம் செய்த மல்லித்தழை சேர்த்து பருகலாம். மருத்துவ பலன்கள்: பசியைத் தூண்டும். நல்ல கிருமிநாசினி.  ஆஸ்துமா, மூக்கடைப்புக்கு அருமருந்து.  கொழுப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்துக்கு நல்ல நிவாரணி..

அத்திக்காய் வடை

தேவையான பொருட்கள்: அத்திக்காய்-1 கப்( அரை வேக்காடு);  கடலை பருப்பு- 1 கப் (அரை மணி நேரம் ஊறவைத்தது);  கடலை எண்ணெய்- தேவைக்கேற்ப;  வெங்காயம்(பெரியது)-2;  சீரகம்-1 மேஜைக்கரண்டி;  இஞ்சி- சிறிய துண்டு;  காய்ந்த மிளகாய்-4;  கறிவேப்பிலை-சிறிது;  பெருங்காயம்-சிறிது;  உப்பு-தேவையான அளவு. செய்முறை: ஊற வைத்த கடலை பருப்புடன் வேக வைத்த அத்திக்காயை சேர்த்து, வடைக்கான பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் சேர்த்து, தட்டையாக தட்டி, கடலை எண்ணெயில் பொந்நிறமாக பொறித்தெடுக்கவும். அத்திக்காய் வடை ரெடி. பயன்: பொதுவாகவே, துவர்ப்பு தன்மையுடன் இருக்கும். அத்திக்காயில் துவர்ப்பு தன்மை சற்று அதிகம். இதை பழமாக சாப்பிடுவதைவிட , காயாக சாப்பிடுவதே நல்லது. அத்திக்காய் வடை ஜீரண உறுப்புகளான கல்லீரல், மண்ணீரல், போன்றவற்றை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும். சிறுநீரகக் கறக்ள் வராமல் தடுக்கும். மலச் சிகக்லையும் விரட்டும்.

கேழ்வரகு அல்வா

தேவையான பொருட்கள்; கேழ்வரகு- 50 கிராம்;  கருப்பட்டி-25 கிராம்;  சர்க்கரை-10 கிராம்;  நெய்- தேவையான அளவு;  நல்லெண்ணெய்-தேவையான அளவு;  ஏலக்காய், முந்திரி மற்றும் திராட்சை-சிறிதளவு. செய்முறை:  ஒரு வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி, கேழ்வரகை 3 நிமிடங்கள் வறுக்க வேண்டும். பிறகு வறுபட்ட கேழ்வரகின் சூடு ஆறும் வரை காத்திருந்து, மீண்டும் அதை ஒரு கடாயில் இட்டு, உடைத்து வைத்திருக்கும் கருப்பட்டியையும் ஒரு தம்ளர் தண்ணீரையும் ஊற்றி கிளறவேண்டும். கூடவே, கொஞ்சம் கொஞ்சமாக நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்து, கட்டி விழுந்துவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கலவை, அல்வா பதத்திற்கு வந்தவுடன் ஏலக்காய், முந்திரி, திராட்சை கலந்து இறக்கினால், கேழ்வரகு அல்வா’ தயார். பயன்கள்; கேழ்வரகில் புரதம், சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து அதிகளவில் இருப்பதுடன், வைட்டமின் பி-1 எனப்படும் தையமின் சத்தும் உள்ளது. இது புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் பெற்றது. மேலும், கேழ்வரகில் உள்ள ‘ட்ரிப்டோபேன்’, அதீத பசி உணர்வை குறைக்கிறது. இதனால், உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.

முடக்கத்தான் கீரைத் துவையல்

தேவையான பொருட்கள்: முடக்கத்தான் கீரை-1 கப்;  மிளகாய் வற்றல்-8;  நல்லெண்ணெய்-தேவையான அளவு; பெருங்காயம்-சிறிதளவு;  உளுத்தம் பருப்பு-சிறிதளவு;  கடுகு-சிறிதளவு;  புளி-எலுமிச்சம் பழ அளவு;  உப்பு-தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மிள்காயை நன்கு வறுத்துக்கொள்ளவும். அத்துடன் புளியையும், சுத்தம் செய்த கீரையையும்சேர்த்து, நன்கு வதக்கிஎடுத்து அரைத்தால், கமகமக்கும் துவையல் தயார். மிக்ஸியில் அரைப்பதைவிட அம்மிக் கல்லில் அரைத்தால், கூடுதல் சுவை இருக்கும்.குறைந்தது 3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். பலன்: வைட்டமின்களும் தாது உப்புக்களும் நிறைந்தது, முடக்கத்தான் கீரை. இந்த துவையலை, உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்வதன் மூலம், மூல நோய், மலச் சிக்கல், பக்கவாதம், மூட்டு நோய்கள் போன்றவை குணமடையும். மூட்டுகளில் தங்கியிருக்கும் புரதம், யூரிக் அமிலம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் கொழுப்புத் திரட்சி, படிமங்களைக் கரைத்து வலிகளைப் போக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு, இக்கீரை மிகவும் நல்லது.

நிலக்கடலை பாயசம்

தேவையான பொருட்கள்: நிலக்கடலை- 1 தம்ளர்;  பாதாம் பருப்பு-1/2 தம்ளர்;  பால்-அரை லிட்டர்;  சர்க்கரை-கால் கிலோ;  ஏலத்தூள், முந்திரிப் பருப்பு, உலர்ன்டஹ் திராட்சை. செய்முறை: நிலக்கடலை, பாதாம் பருப்பைதண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் நன்கு அரைக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் பாலைக் காய்ச்சவும்.அத்துடன் சர்க்கரை சேர்க்கவும். கொதிக்கும்போது வேர்க்கடலை, பாதாம் பருப்பு, ஏலத்தூள், உலர்ந்த திராட்சை, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, சேர்த்து, நன்கு கிளறவும். ‘கமகம’ வாசனை வரும்போது, இறக்கி பறிமாறவும். குளிர்ச்சியை விரும்பினால், ஆறியதும் அப்படியே ‘ஃப்ரீசரில்’ 1 மணி நேரம் வைத்திருந்து கூல் ஆன பிறகு குடிக்கலாம்.

தினை அரிசி பாயசம்

தேவையான பொருட்கள்: தினை அரிசி-100 கிராம்;  வெல்லம்-1 கப்;  தேங்காய்ப் பால்- 1கப்;  முந்திரி-10;  நெய்-1 ஸ்பூன். செய்முறை: கடாயில் நெய் விட்டு, தினை அரிசியை வறுத்தபின், ஒரு பங்கு அரிசிக்கு , இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். பின் வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதனுடன் தேங்காய்ப் பால், வறுத்த முந்திரியை சேர்த்தால், குழந்தைகள் விரும்பும் சுவையான பாயசம் தயார்.

பூரண் போளி

தேவையான பொருள்கள்: கோதுமை மாவு -- கால் கிலோ கடலைப்பருப்பு -- 200 கிராம் வெல்லம் -- 200 கிராம் ஏலக்காய் -- 2 நெய் -- ஒரு கிண்ணம். செய்முறை: கோதுமை மாவ நன்கு சலித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். கடலைப்பருப்பை, குக்கரில் நன்கு குழைய வேக விடவும். வெந்த பருப்பை தண்ணிர் முழுவதும் நன்கு வடியவிட்டு ஆற விடவும். பருப்பு வெல்லம் ஏலக்காய் எல்லாவற்றையும் மிக்சியில் நைசாக அரைக்கவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரைத்த கலவையை ஊற்றி கை விடாமல் கிளறவும். நன்கு கெட்டி ஆனதும் இறக்கி ஆற விடவும். ஆறியதும் நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டவும். பிசைந்து வைத்திருக்கும் கோதுமை மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி நடுவில் பூரணத்தைவைத்து குழவியால் அழுத்தாமல் வட்டமாக தேய்க்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி போளியைப் போடவும். ஒருபுறம் சிவந்ததும், மறுபுறம் திருப்பி, மீண்டும் ஒரு ஸ்பூன் நெய்விடவும். இருபுறமும் சிவந்து நன்கு வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.

இறால் ஃப்ரை

தேவையானவை: இறால் - 200 கிராம் உருளைக்கிழங்கு - 2 இஞ்சி - பூண்டு விழுது - 2 தேக்கரண்டி பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி விழுது - கால் கப் மிளகாய்தூள் - அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி மிளகு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி கடுகு - அரை தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: இறாலைச் சுத்தம் செய்து ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி விழுது, மிளகாய்தூள், மஞ்சள்தூள், மிளகு, சீரகத்தூள், உப்பு, நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும். உருளைக்கிழங்கு வெந்து, நீர் வற்றி மசாலா புரண்டு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றுடன் வேகவைத்த கலவையைக் கொட்டி 3 நிமிடங்கள் கிளறி இறக்கவும். சுவைமிக்க இறால் ஃப்ரை ரெடி.

மிக்ஸ்டு வெஜிடபிள் பராத்தா

தேவையான பொருட்கள்:   கோதுமை மாவு - கால் கிலோ உருளைக்கிழங்கு (வேக வைத்தது மசித்தது) வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது) நறுக்கிய தக்காளி - ஒன்று கொத்தமல்லி, புதினா - சிறிதளவு நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன் எண்ணெய் - கால் கப் உப்பு - தேவையான அளவு செய்முறை:   கோதுமை மாவில் உப்பு கலந்து தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, பிசைந்து கொள்ளவும்.   மாவை கொஞ்சம் எடுத்து (சிறிய கமலா ஆரஞ்சு சைஸ்) வட்டமாக இட்டு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தடவி, காய்கறி கலவையில் 2 டீஸ்பூன் அளவு வைத்து மூடவும். மீண்டும் சிறிது கனமாக இட்டு சூடான தவாவில் போட்டு, வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடவும்.    சுற்றிலும் எண்ணெய் தடவும். மேலேயும் ஸ்பூனால் எண்ணெய் தடவவும். வெந்ததும் எடுத்தால், மிக்ஸ்டு வெஜ் பராத்தா தயார்.

பீட்ரூட் ரைஸ்

தேவையான பொருள்கள் அரிசி - 3 மேசைக்கரண்டி பாசிப்பருப்பு - 3 மேசைக்கரண்டி பூண்டு - ஒரு பல் பீட்ரூட் - ஒன்று (சிறியது) கேரட் - கால் பகுதி உப்பு - தேவையான அளவு செய்முறை தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும். அரிசியையும், பாசிப்பருப்பையும் கழுவி வைக்கவும். பீட்ரூட் மற்றும் கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். ஒரு சிறிய குக்கரில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடியிட்டு 3 விசில் வரும் வரை வைத்திருக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து நன்கு மசித்துவிடவும். சுவையான பீட்ரூட் ரைஸ் தயார். விரும்பினால் நெய் சேர்த்துக் கொள்ளலாம். பீட்ரூட் ரைஸ் பெரும்பாலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும். பீட்ரூட், பாசிபருப்பு ஆகியவை சேர்க்கப்படுவதால் சத்தான உணவாகவும் உள்ளது.

மைசூர் அடை

தேவையானவை: பச்சரிசி மாவு - 2 கப் பச்சை மொச்சைப் பயறு - அரை கப் தேங்காய்ப்பூ - 1 கப் பச்சை மிளகாய் - 6 பெருங்காயப் பவுடர் - அரை டீஸ்பூன் சீரகம் - 1 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு நெய் - தேவையான் அளவு செய்முறை: பச்சை மிளகாய், உப்பு இரண்டையும் மிக்ஸியில் அரைக்கவும். பச்சரிசி மாவில், அரைத்த விழுது, தேங்காய்ப்பூ, சீரகம் ஆகியவற்றை சேர்க்கவும். பச்சை மொச்சைப் பயறை குழைய வேக வைக்கவும். வெந்த பயறை, மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும். இதையும் மாவில் சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, அடை மாவு பதத்தில் கலக்கவும். அடைக்கல்லை அடுப்பில் காயவைத்து, இந்த மாவை ஊற்றி, நெய் சேர்த்து வேக வைக்கவும். மைசூர் அடை ரெடி! சர்க்கரை, தேங்காய் சட்னியுடன் சேர்த்துப் பரிமாறவும்.

மஷ்ரும் புலாவ்

தேவையானவை:- பாசுமதி அரிசி - 2 கப் வெங்காயம் - 2 மஷ்ரூம் - 10 - 15 கேரட், பீன்ஸ் - சிறிது இஞ்சி - பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப கரம் மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் - 5 புதினா - சிறிது பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தாளிக்க செய்முறை:- வெங்காயம், மஷ்ரூம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். கேரட், பீன்ஸைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். அரிசியைக் கழுவி ஊற வைக்கவும். பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். இதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் புதினா இலை சேர்த்து மஷ்ரூம், கேரட், பீன்ஸ் சேர்க்கவும். காய்களைச் சிறிது நேரம் வதக்கி, பின் அரிசி சேர்த்து 2 நிமிடங்கள் புரட்டவும். இதில் உப்பு சேர்த்து தேவையான நீர் விட்டு கொதிக்க விடவும். பின் சிறுதீயில் மூடி வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் மேலே கரம் மசாலாத்தூள் தூவி மூடி விடவும். சுவையான மஷ்ரூம் ப...

சிக்கன் தர்பாரி...

தேவையானவை:- கோழி - அரை கிலோ தக்காளி - 2 கொண்டைக்கடலை - 100 கிராம் முந்திரி - 10 தேங்காய் - ஒரு மூடி புளி - நெல்லிக்காய் அளவு இஞ்சி - ஒரு துண்டு மலைப் பூண்டு - 5 காய்ந்த மிளகாய் - 4 கிராம்பு - 4 பட்டை - 2 அங்குலத் துண்டு ஏலக்காய் - 6 மல்லி - ஒரு மேசைக்கரண்டி கசகசா - அரை மேசைக்கரண்டி நெய் - 3 மேசைக்கரண்டி வெங்காயம் - 2 (சிறியது) மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி மிளகாய்த் தூள் - அரைத் தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை:- மிதமான சூட்டிலுள்ள வெந்நீரில் புளியைக் கரைத்து வடிகட்டி, ஒரு கப் அளவுக்குப் புளிக்கரைசலை எடுத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி ஒரு கப் அளவுக்குப் பால் எடுத்து வைக்கவும். கோழியைச் சுத்தம் செய்து துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டினை தோலுரித்து காய்ந்த மிளகாயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். முந்திரியைத் தனியாக அரைத்து வைக்கவும். கிராம்பு, பட்டை, ஏலக்காய், மல்லி, கசகசா ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். கொண்டைக்கடலையை 3 அல்லது 4 மணி நேரம் ஊறவைத்து, பிறகு வேகவைத்து மச...

சேமியா மட்டன் பிரியாணி

தேவையானவை:- சேமியா - அரை கிலோ மட்டன் - அரை கிலோ எண்ணெய் - 100 மில்லி நெய் - 50 மில்லி இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்றரை டேபிள்ஸ்பூன் சில்லி பவுடர் - ஒன்றரை டீஸ்பூன் கரம் மசாலா - அரை டீஸ்பூன் தயிர் - 2 டேபிள்ஸ்பூன் வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 200 கிராம் மல்லி, புதினா - கை பிடியளவு மிளகாய் - 3 எலுமிச்சை சிறியது - பாதி தேங்காய் பாதி - பால் எடுக்க உப்பு - தேவைக்கு செய்முறை:- மட்டனைச் சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும். அதில் அரை டீஸ்பூன் சில்லி பவுடர், அரை டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு, தயிர், உப்பு சேர்த்து ஊறவைக்கவும். சேமியாவைச் சிவக்க வறுத்து எடுக்கவும். தேங்காய் பால் எடுக்கவும். வெங்காயம், தக்காளி, மல்லி, புதினா கட் செய்து வைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய்விட்டு காய்ந்ததும் வெங்காயம் வதக்கி, இஞ்சி பூண்டு, கரம் மசாலா போட்டு வதக்கி சிறிது நேரம் வைக்கவும். பின்பு சில்லி பவுடர், தக்காளி, மல்லி, புதினா, மிளகாய், உப்பு சேர்த்து புரட்டி மசிய விடவும். மசிந்தவுடன் மட்டனை சேர்த்து புரட்டி குக்கரை மூடி 3 விசில் வைக்கவும். ஆவி அடங்கியவு...

சுறா மீன் புட்டு

தேவையானவை:- சுறா மீன் - 3 துண்டு மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி தண்ணீர் - ஒரு கப் பச்சை மிளகாய் - 2 சின்ன வெங்காயம் - 10 சோம்புத்தூள் - அரை தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து உப்பு - அரை தேக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி தேங்காய் - கால் கப் செய்முறை:- சுறா மீன் துண்டுளின் மேலே உள்ள தோலை உரித்து சுத்தம் செய்து கொள்ளவும். மீனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள் போட்டு மூடி 8 நிமிடங்கள் வேக வைக்கவும். வெந்ததும் மீனை எடுத்து உதிர்த்து விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின்னர் கறிவேப்பிலை போட்டு வதக்கி விட்டு, சோம்புத்தூள், உப்பு போட்டு புரட்டவும். அதனுடன் உதிர்த்து வைத்திருக்கும் மீனைப் போட்டு 3 நிமிடங்களுக்குக் கிளறி, அதனுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சுவையான சுறா மீன் புட்டு தயார்.

தினை பொங்கல்

தேவையானவை:- தினை - 2 ஆழாக்கு (ஒரு டம்ளர்) பாசிப்பருப்பு - ஒரு ஆழாக்கு (அரை டம்ளர்) சீரகம் - ஒரு தேக்கரண்டி மிளகு - ஒரு தேக்கரண்டி இஞ்சி துருவல் - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - 10 நிலக்கடலை - ஒரு மேசைக்கரண்டி நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி பால் - ஒரு டம்ளர் நெய் - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை:- தேவையான பொருள்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை லேசாக வறுத்து, தினையுடன் சேர்த்து நன்கு களைந்து கல் அரித்து குக்கரில் போட்டு, 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 5, 6 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து பாலைச் சேர்த்து கலந்து கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு சீரகம், மிளகு, நிலக்கடலை, இஞ்சி துருவல் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வதக்கியவற்றைப் பொங்கலில் சேர்த்து கலந்துவிடவும். அதனுடன் நெய் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்துக் கிளறி 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும். சுவையான தினை பொங்கல் தயார். சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.