தேவையான பொருட்கள்:
நிலக்கடலை- 1 தம்ளர்;
பாதாம் பருப்பு-1/2 தம்ளர்;
பால்-அரை லிட்டர்;
சர்க்கரை-கால் கிலோ;
ஏலத்தூள், முந்திரிப் பருப்பு, உலர்ன்டஹ் திராட்சை.
செய்முறை:
நிலக்கடலை, பாதாம் பருப்பைதண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் நன்கு அரைக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் பாலைக் காய்ச்சவும்.அத்துடன் சர்க்கரை சேர்க்கவும். கொதிக்கும்போது வேர்க்கடலை, பாதாம் பருப்பு, ஏலத்தூள், உலர்ந்த திராட்சை, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, சேர்த்து, நன்கு கிளறவும். ‘கமகம’ வாசனை வரும்போது, இறக்கி பறிமாறவும். குளிர்ச்சியை விரும்பினால், ஆறியதும் அப்படியே ‘ஃப்ரீசரில்’ 1 மணி நேரம் வைத்திருந்து கூல் ஆன பிறகு குடிக்கலாம்.

கருத்துகள்
கருத்துரையிடுக