முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சேமியா மட்டன் பிரியாணி

தேவையானவை:-

சேமியா - அரை கிலோ
மட்டன் - அரை கிலோ
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 50 மில்லி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
சில்லி பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 200 கிராம்
மல்லி, புதினா - கை பிடியளவு
மிளகாய் - 3
எலுமிச்சை சிறியது - பாதி
தேங்காய் பாதி - பால் எடுக்க
உப்பு - தேவைக்கு

செய்முறை:-

மட்டனைச் சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும். அதில் அரை டீஸ்பூன் சில்லி பவுடர், அரை டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு, தயிர், உப்பு சேர்த்து ஊறவைக்கவும். சேமியாவைச் சிவக்க வறுத்து எடுக்கவும். தேங்காய் பால் எடுக்கவும். வெங்காயம், தக்காளி, மல்லி, புதினா கட் செய்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய், நெய்விட்டு காய்ந்ததும் வெங்காயம் வதக்கி, இஞ்சி பூண்டு, கரம் மசாலா போட்டு வதக்கி சிறிது நேரம் வைக்கவும். பின்பு சில்லி பவுடர், தக்காளி, மல்லி, புதினா, மிளகாய், உப்பு சேர்த்து புரட்டி மசிய விடவும். மசிந்தவுடன் மட்டனை சேர்த்து புரட்டி குக்கரை மூடி 3 விசில் வைக்கவும்.
ஆவி அடங்கியவுடன் திறந்து மட்டன் மசாலாவை வேறு பாத்திரத்துக்கு மாற்றி விடவும், மட்டனில் சிறிது தண்ணீர் இருக்கும், அதனுடன் தேங்காய் பால் சேர்க்கவும். அளவுத்தண்ணீர், தேங்காய் பால் சேர்ந்து சேமியாவின் அளவுக்கு ஒன்றரை அளவு வைக்கவும். எலுமிச்சை பிழியவும்.
கொதிவந்ததும் சேமியாவைத் தட்டி புரட்டி சிம்மில் 10 நிமிடங்கள் மூடி போட்டு வைத்து அடுப்பை அணைத்து விடவும். திரும்ப 10 நிமிடங்கள் கழித்து திறந்து புரட்டி பரிமாறவும். சுவையான சேமியா மட்டன் பிரியாணி ரெடி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுகு தானிய உப்புமா

தேவையான பொருட்கள்: குதிரைவாலி அரிசி-100 கிராம்;  சாமை அரிசி-50 கிராம்;  வரகு அரிசி-100 கிராம்;  தினை அரிசி-50 கிராம்;  காய்கறிகள்-1 கப் ( தேவைக்கேற்ப);  நல்லெண்ணெய்-தேவைக்கேற்ப;  மிளகாய் வற்றல்-6;  கடுகு-சிறிதளவு;  உளுத்தம் பருப்பு-சிறிதளவு;  கறிவேப்பிலை-சிறிதளவு;  கொத்தமல்லி-சிறிதளவு;  உப்பு-தேவையான அளவு. செய்முறை: ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அதனுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளிக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வெட்டிவைத்த காய்கறிகளையும் உப்பையும் கலந்து 2 நிமிடம் வேகவிடவும். இத்துடன் குருணையாகக்ப்படட் குதிரைவாலி, சாமை, வரகு மற்றும் தினை அரிசியைக் சேர்த்து நன்றாக வேகும்வரை கிளறினால், குறுதானிய உப்புமா தயார். பலன்கள்: குறுதானியங்களில் உள்ள கனிம சத்து, உடல் கட்டமைப்பை செதுக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து, எலும்பு, பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகிறது. செல் வளர்சிதை மாற்றத்திலும்...

இறால் ஃப்ரை

தேவையானவை: இறால் - 200 கிராம் உருளைக்கிழங்கு - 2 இஞ்சி - பூண்டு விழுது - 2 தேக்கரண்டி பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி விழுது - கால் கப் மிளகாய்தூள் - அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி மிளகு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி கடுகு - அரை தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: இறாலைச் சுத்தம் செய்து ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி விழுது, மிளகாய்தூள், மஞ்சள்தூள், மிளகு, சீரகத்தூள், உப்பு, நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும். உருளைக்கிழங்கு வெந்து, நீர் வற்றி மசாலா புரண்டு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றுடன் வேகவைத்த கலவையைக் கொட்டி 3 நிமிடங்கள் கிளறி இறக்கவும். சுவைமிக்க இறால் ஃப்ரை ரெடி.

சுறா மீன் புட்டு

தேவையானவை:- சுறா மீன் - 3 துண்டு மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி தண்ணீர் - ஒரு கப் பச்சை மிளகாய் - 2 சின்ன வெங்காயம் - 10 சோம்புத்தூள் - அரை தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து உப்பு - அரை தேக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி தேங்காய் - கால் கப் செய்முறை:- சுறா மீன் துண்டுளின் மேலே உள்ள தோலை உரித்து சுத்தம் செய்து கொள்ளவும். மீனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள் போட்டு மூடி 8 நிமிடங்கள் வேக வைக்கவும். வெந்ததும் மீனை எடுத்து உதிர்த்து விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின்னர் கறிவேப்பிலை போட்டு வதக்கி விட்டு, சோம்புத்தூள், உப்பு போட்டு புரட்டவும். அதனுடன் உதிர்த்து வைத்திருக்கும் மீனைப் போட்டு 3 நிமிடங்களுக்குக் கிளறி, அதனுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சுவையான சுறா மீன் புட்டு தயார்.