தேவையான பொருட்கள்: சர்க்கரை வள்ளிக் கிழங்கு-1/2 கிலோ; கேரட்-1/4 கிலோ; சர்க்கரை-100 கிராம்; ரொட்டித் துண்டு-4; பால்-1/4 டம்ளர்; ஏலத்தூள்-1 தேக்கரண்டி; ரொட்டித்தூள் அல்லது ரஸ்க் தூள்-சிறிதளவு; நெய், எண்ணெய். செய்முறை: ரொட்டித் துண்டுகளை பாலில் ஊற்வைகக்வும். கிழங்கு, கேரட்டைக் கழுவி, வேக வைத்து, தோலுரித்து மசித்துக்கொள்ளவும். இத்துடன் ரொட்டித் துண்டுகளப் போட்டு கட்டியின்றி பிசையவும். சர்க்கரையுடன் நீர் கலந்து காய்ச்சி,, கம்பிப் பாகு வந்தவுடன், ஏலத்தூள் , பிசைந்த கலவையைப் போட்டு, சிறிது நெய் விட்டு சுருள வதக்கி எடுக்கவும். இந்தக் கலவை வடை மாவு பதத்தில் இருகக்வேண்டும். இதை கட்லெட் வடிவில் தட்டி ரொட்டித் தூள் அல்லது ரஸ்க் தூளில் புரட்டி அடுப்பில் சூடான தவாவில் நெய்/எண்ணெய் விட்டு, சிவக்க வேகவிட்டு எடுக்கவும். சுவையான கிழங்கு, கட்லெட் தயார். இன்னும் வித்தியாசமாக விரும்பினால், தக்காளி சாஸ் தொட்டும் சாப்பிடலாம். கிழங்கு கட்லெட்